சீர்காழி அருகே நடைபெற்ற சையது யாசின் மவுலானா தர்கா கந்தூரி விழா : சந்தன கூடு வைபவத்தில் வெளிநாட்டினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Jun 18 2022 1:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நடைபெற்ற சையது யாசின் மவுலானா தர்கா கந்தூரி விழா சந்தன கூடு வைபவத்தில் லண்டன் துபாய் உள்ளிட்ட வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்கா உள்ளது. கீழ்திசை நாடுகளில் இஸ்லாமிய மார்க்கத்தை பரப்பிய இவர், இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசலில் 1964-ம் ஆண்டு முக்தி அடைந்தார். அவர் இறைவனடி சேர்ந்த நாள் ஆண்டு தோறும் கந்தூரி விழாவாக நடைபெறுகிறது. அதன்படி இன்று அதிகாலை நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில் தஞ்சை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சந்தன குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சையது மவுலானா சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.