திருப்பதி உண்டியல் பணத்தை எண்ண நவீன கட்டடம்
Jun 21 2022 10:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் உண்டியல் காணிக்கையை கணக்கிடுவதற்காக 20 கோடியில் நவீன கட்டிடம் கட்டும் பணியை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல், முன்பு, ஒருநாளைக்கு 2 முறை நிரம்பும். ஆனால் தற்போது பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், ஒரே நாளில் திருப்பதி உண்டியல் 9 முதல் 13 முறை நிரம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.