ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை - யாத்ரீகர்களை நஷ்ரி இடத்தில் அதிகாரிகள் முறைப்படி வரவேற்பு
Jul 1 2022 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீரில், அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்களை நஷ்ரி என்ற இடத்தில் அதிகாரிகள் முறைப்படி வரவேற்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்கியுள்ள நிலையில், பக்தர்களை காஷ்மீர் சுற்றுலாத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். இதுகுறித்து பேசிய அதிகாரிகள், 6 ஆயிரம் யாத்ரீகர்கள், பால்கன் & பஹல்காமில் இருந்து புனித குகையை அடைவார்கள் என தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.