காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கும் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில் ஆனி உத்திர திருவிழா : கொடியேற்றதுடன் கோலாகல தொடங்கியது
Jul 1 2022 2:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவிலில் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
முக்தி தரும் நகரங்களில் முதன்மையானதாக விளங்கும் காஞ்சி நகரில் 16 செல்வங்கள் சிவலிங்கங்களாக உருவெடுத்து காட்சி தரும் திருக்கோவில் என்ற சிறப்பை பெற்றது வழக்கறுத்தீஸ்வரர் ஆலயம். இக்கோவிலில் வழிபடுவதன் மூலம் வழக்குகள் அனைத்தையும் நடுவாய் நின்று ஈஸ்வரன் தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம். இத்தனை சிறப்புமிக்க இந்த கோவிலின் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வழக்கறுத்தீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. இந்த விழாவில் அப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.