2 ஆண்டுகளுக்கு பிறகு திருமலையில் அகண்ட ஹரிநாம சங்கீர்த்தனம்
Jul 25 2022 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 1-ம் தேதி முதல் அகண்ட ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதியில் கொரோனா தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அகண்ட ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெறவில்லை. தற்போது மீண்டும் இதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து தர்ம பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாட்டுப்புற கலைகளைப் பாதுகாக்கவும், அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றவும் திருமலை தேவஸ்தானம் இதனை வரும் 1ம் தேதி முதல் நடத்துகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் திருமலைக்கு வந்து ஆன்மிக பஜனைகளையும், கீர்த்தனைகளையும் பாட உள்ளனர்.