கும்பகோணம் கொரநாட்டு கருப்பூர் புனித அன்னம்மாள் ஆலய திருத்தேர் பவனி : ஏராளமானோர் பங்கேற்பு
Jul 26 2022 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் புனித அன்னம்மாள் ஆலயத்தின் திருத்தேர் பவனியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்த ஆலயத்தின் 104 ம் ஆண்டு திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் கூட்டு திருப்பலியும் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 9ம் நாளான நேற்றிரவு வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் புனித அன்னம்மாளின் திருவுருவம் தாங்கிய திருத்தேர் பவனி நடைபெற்றது. அப்போது வனத்து சின்னப்பர் உள்ளிட்ட மூன்று திருத்தேர்களும் சென்ற காட்சி காண்போரை கவர்ந்தது.