ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சதுரகிரி மலை கோயிலில் குவிந்த பக்தர்கள்
Jul 26 2022 2:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சதுரகிரி மலை கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இங்கு, ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன், நேற்று முதல் வரும் 30ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பிரதோஷம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள், சதுரகிரி கோயிலில் குவிந்து, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.