புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணம் பகுதியில் தேர் கவிழ்ந்த விபத்து - 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
Jul 31 2022 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேரோட்ட விழாவில், தேர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டையில் புகழ்பெற்ற அன்னை பிரகதாம்பாள் கோயில் திருவிழா கொடியேற்றம் கடந்த 8 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. 9-வது நாளான இன்று காலை 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. நான்கு தேர்களும் முக்கிய வீதிகள் வழியாக வந்தன. முதல் தேரில் விநாயகர், 2-வது தேரில் முருகர், 3-வது தேரில் பிரகதாம்பாள், 4-வது தேரில் சண்டிகேஸ்வரர் என வரிசையாக தேர்கள் புறப்பட்டன. அப்போது, மூன்றாவது தேர் திடீரென கவிழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.