திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு : நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
Jul 31 2022 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஞாயிறு விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையை யொட்டி இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடும் பக்தர்கள், சுமார் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.