நெல்லை பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுப்பு : வனத்துறையினரை கண்டித்து பக்தர்கள் போராட்டம்
Jul 31 2022 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்ததை கண்டித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமாவாசையை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சென்று அங்கே 3 நாட்கள் தங்க உற்றார் உறவினர்களுடன் உணவு உண்டு பக்தர்கள் திருவிழாவை கொண்டாடுவார்கள். நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவிழா கொண்டாட வந்தனர். எனினும், வனத்துறையினர் அனுமதி மறுத்ததுடன், அகஸ்தியர் அருவியில் குளிக்கவும் தடை விதித்தனர். கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்காததை கண்டித்து, பாபநாசம் சோதனைச்சாவடியில் பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.