ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் : ஆயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
Aug 1 2022 1:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா... கோபாலா... என்ற கோஷங்கள் முழங்க திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தரில் உள்ள ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில், கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் திருவிழா மிக முக்கியமான நிகழச்சியாகும். இத் திருவிழாவின் 9 ஆம் நாளான இன்று முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் நடை பெற்றது. ஆடிப்பூர தேர்த் திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து நான்கு ரத வீதிகளின் வழியாக தேரை இழுத்தனர். திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.