ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் : வரலட்சுமி விரதத்தையொட்டி நேரில் சென்று வழிபாடு நடத்தினார்
Aug 5 2022 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரலட்சுமி விரதத்தையொட்டி சென்னை மண்ணடியில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம் செய்தார்.
வரலட்சுமி விரதத்தையொட்டி சென்னை மண்ணடியில் அமைந்துள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில் ஏராளமான பெண்கள் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஜஸ்வர்யா, காளிகாம்பாள் கோயிலுக்கு நேரில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது, ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மகளிர் அணி மாவட்ட செயலாளர் பிரியதர்ஷினி மற்றும் தமிழ்நாடு பாரம்பரிய தச்சு தொழிலாளர்கள் நல சங்கத்தின் செயலாளர் மோகன் குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.