திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்
Aug 16 2022 12:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஆவணி திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, முதலில் விஸ்வரூப தரிசனமும், அதன் பிறகு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். காலை ஐந்து முப்பது மணிக்கு மேல், கோயில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்படும். 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெறும். ஆவணி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.