கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆவணி தேர் திருவிழா : திரளான பக்தர்கள் சப்பர தேரை வடம் பிடித்து இழுத்தனர்
Sep 11 2022 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில், ஆவணி தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரத் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆவணி மாத தேர் திருவிழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள் திருவிழாவில் ஒன்பதாவது நாளான இன்று பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர், சப்பரத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். சப்பர தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நாளை நடைபெற உள்ள ஆராட்டு திருவிழாவோடு பத்து நாள் ஆவணி தேர் திருவிழா நிறைவு பெறுகிறது. விடுமுறை நாள் என்பதால் சுசீந்திரம் வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.