நாகை அருகே இரு மீனவ நிர்வாகத்துக்கு இடையே கருத்து வேறுபாடு : கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம்: இரு தரப்பினரிடையே பதற்றம்
Sep 11 2022 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை அருகே இரு மீனவ நிர்வாகத்துக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவில் மூடப்பட்டது. இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் ஆவணி மாத பாலாபிஷேகம் அதிகாலை 5 மணி முதல் நடைபெற இருந்தது. ஆனால், பக்தர்கள் பாலாபிஷேகம் செய்ய மாவட்ட ஆட்சியர் தடை விதித்ததால், கோவில் வாசல் முன்பு பக்தர்கள் காத்திருந்தனர். இரு தரப்பு நிர்வாகத்திடம் நாகை வட்டாட்சியர் கார்த்திகேயன், மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு தரப்பு மீனவர்களிடம் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவர தடுப்பு வாகனம் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவிலைத் திறந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ய அனுமதி வழங்குமாறு அக்கரைப்பேட்டை கிராம மக்களும், பக்தர்களும், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பதட்டமான சூழல் நிலவியது.