சிவகங்கையில் எருமை மாடுகளை பலியிட்டு ரத்தத்தை குடிக்கும் வினோத திருவிழா - பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று காவல் தெய்வங்களுக்கு வழிபாடு
Sep 12 2022 7:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை அருகே எருமை மாடுகளை பலியிட்டு ரத்தத்தை குடிக்கும் திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை அருகே உள்ள பையூர் பழமலை நகரில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பழமலை நகரில் உள்ள நரிக்குறவர்கள் தங்களது தெய்வங்களுக்கு எருமை மாடுகளை பலியிட்டு, அதன் ரத்தத்தை குடித்து, காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். இவ்விழாவில் சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.