குலசேரகப்பட்டணம் தசரா விழாவின் போது பக்தி பாடல்கள் அல்லாத பாடல்களை பாடவும், ஒலிப்பரப்பவும் தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Sep 15 2022 8:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் ஆபாச நடனத்திற்கும், பாடலுக்கும் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் துணை நடிகைகள், நடன அழகிளை அழைத்து வந்து ஆபாசமாக நடனமாடுவதாகவும், இதற்கு தடை விதிக்கவேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். விழாவை போலீசார் கண்காணிக்கவேண்டும் என்றும், உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.