புரட்டாசி மாத பிறப்பன்று திருப்பதியில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் : இலவச தரிசனத்துக்காக 30 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருப்பு
Sep 18 2022 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஏழுமலையானுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் இன்று பிறந்தது. புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசித்தால் புண்ணியம் கிடைப்பதுடன் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு முறையாவது ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என எண்ணுகின்றனர். வருகிற 27-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. புரட்டாசி மாதம் பிறந்ததால் திருமலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இலவச தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட தூரம் வரிசையில் 30 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கின்றனர்.