திருப்பூர் அருகே ஆலய விழாவில் நடைபெற்ற கத்தி போடும் நிகழ்ச்சி - ஆயிரக்ணக்கான இளைஞர்கள் நேர்த்திக்கடன்
Oct 5 2022 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் இளைஞர்கள், கத்தி போட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிராமத்தில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் தசரா விழா நடைபெற்றது. நேற்று மாவிளக்கு ஊர்வலமும் இன்று அம்பு சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடர்ந்து கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர்கள், சிறுவர்கள் ஒன்று சேர்ந்து கத்தி நடனம் ஆடி, இராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு தங்கள் ரத்தத்தை காணிக்கையாக செலுத்தினர். அப்போது அவர்கள், தீசுக்கோ தாயே தீசுக்கோ என பக்தி முழக்கமிட்டனர். இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.