திருச்சி பின்னத்தூரில் உள்ள எல்லையம்மன் கோவிலில் நடைபெற்ற மகா நோன்பு வேடபரி - குதிரை, அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளிய தெய்வங்கள்
Oct 5 2022 1:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம், பின்னத்தூரில் உள்ள எல்லையம்மன் கோவிலில் விஜயதசமி விழாவை யொட்டி, மகா நோன்பு வேடபரி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பின்னத்தூரில் அமைந்துள்ள எல்லையம்மன் கோவிலில் விஜயதசமியான இன்று அதிகாலை மகாநோன்பு வேடபரி திருவிழா நடைபெற்றது.
இந்த வேடபரி திருவிழாவில் பரசுராமர், பரதராமர், எல்லையம்மன், உள்ளிட்ட தெய்வங்கள் ஒவ்வொன்றும் குதிரை, அன்னம், என தனித்தனி வாகனங்களில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தொடர்ந்து எல்லையம்மன் கோவிலில் இருந்து வாணவேடிக்கைள் நிகழ்த்தியபடி சென்ற பக்தர்கள், காவிபுளி என்ற இடத்தில் ஆட்டுக்குட்டி பலியிட்டு, சுவாமிக்கு எரிசோறு படைத்து வழிபட்டனர். இந் நிகழ்ச்சி முடிந்து கோயில் திரும்பும் போது பொட்டல்மேடு என்ற இடத்தில், சுவாமிகள் எழுந்தருளிய தேர் மற்றும் வாகனங்களை கிராம மக்கள் தோளில் சுமந்து கொண்டு முன்னும் பின்னுமாக ஓடியவாறு வழிபாடு நடத்தினர்.