திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியில் குவிந்த பக்தர்கள் : ரூ.1,34,54,461 உண்டியல் காணிக்கை
Nov 19 2022 11:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, சுமார் ஒன்றரை கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர். அண்ணாமலையார் கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணைஆணையர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் சிவனடியார்களால் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 1 கோடியே 34 லட்சத்து 54 ஆயிரத்து 461 ரூபாயும், 174 கிராம் தங்கம், 852 கிராம் வெள்ளி ஆகியவையும் பக்தர்களால் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன.