கன்னியாகுமரியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் - கடலில் புனித நீராடியும், கோவிலில் சாமி தரிசனம் செய்தும் உற்சாகம்
Nov 21 2022 9:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் ஆண்டின் இரண்டாவது மிகப்பெரிய சுற்றுலா சீசன் களைகட்டியுள்ளது. வார விடுமுறையான நேற்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிய ஐயப்ப பக்தர்கள், பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சூரிய அஸ்தமனத்தை கண்டும், செல்ஃபி எடுத்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். காணும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதிய நிலையில், குடிநீர், கழிவறைகள், மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்யாததால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.