திருவண்ணாமலையில் நாளை திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் : பிடாரி அம்மன் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
Nov 26 2022 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி
பிடாரி அம்மன் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தீபத்திருவிழா கொடியேற்றம் நாளை நடைபெற உள்ள நிலையில், நேற்று அண்ணாமலையார் கோயில் காவல் தெய்வமான பிடாரி அம்மனின் உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி, பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் திட்டி வாசல் வழியாக வந்து ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று இரவு விநாயகர் உற்சவம் மற்றும் சந்திரசேகரர் உலா நடைபெற உள்ளது.