காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் நடிகர் டி.ராஜேந்தர், சுவாமி தரிசனம் - காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலிலும் வழிபாடு
Dec 7 2022 12:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டி வழக்கறுத்தீசுவர் கோவிலில் அவரது தந்தையும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் சுவாமி தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காமாட்சி அம்மன் கோயில், வழக்கறுத்தீசுவரர் கோயிலில் திரைப்பட நடிகரும், இயக்குனர், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். நவக்கிரகங்களையும் வழிபட்டு பின்னர் ஆலயத்தில் விளக்கு ஏற்றியும் தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் மருத்துவச் சிகிச்சை பெற்று மறுபிறவி எடுத்து நல்ல உடல் நலத்தோடு காஞ்சிபுரம் வந்துள்ளதாக தெரிவித்தார். அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றதற்காக வழக்கறுதீஸ்வருக்கு நன்றி தெரிவிக்க வந்ததாக குறிப்பிட்ட டி.ராஜேந்தர், சிலம்பரசன் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், மருமகளை தேர்வு செய்யும் வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு விட்டதாக தெரிவித்தார்.