பழனி முருகன் கோவிலில் குவிந்து வரும் பக்தர்கள் - நேற்றைய கும்பாபிஷேகத்தில் தரிசனம் செய்ய முடியாதவர்கள் இன்று படையெடுப்பு
Jan 28 2023 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது கூட்டம் அதிகமாக இருந்ததால் தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் இன்று அங்கு தரிசனம் செய்தனர். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு இன்று வருகை தந்தனர். குடமுழுக்கு முடிந்து முருகனை தரிசிக்க மிகுந்த ஆர்வத்துடன் அவர்கள் பழனி மலையில் குவிந்தனர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று விமரிசையாக நடைபெற்றது.