சத்தியமங்கலம் அருகே கோயில் திருவிழாவில் ஆயிரத்து 500 கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன் - 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்
Mar 7 2023 7:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள கெஜஹட்டி ஆதி கருவண்ணராயர் கோயில் திருவிழாவில் ஆயிரத்து 500 கிடாய்கள் வெட்டி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பவானிசாகர் அருகேயுள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி நாளன்று பொங்கல் திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான விழா, கடந்த பிப்ரவரி 27ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கிய நிலையில், நேற்று பொங்கல் விழா நடந்தது. இதில் கோபி, அந்தியூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.