தருமபுரி அருகே கோயில் திருவிழாவில் ராட்டின ஊழியர்களை கடுமையாக தாக்கிய வாலிபர்கள் - 2 சுற்றுகள் ராட்டினத்தை குறைவாக சுற்றியதால் ஆத்திரம் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
Mar 12 2023 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தருமபுரி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் ராட்டின ஊழியர்களை அப்பகுதி வாலிபர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஸ்ரீ புதுர் மாரியம்மன் கோயில் திருவிழா நடைப்பெற்று வருகிறது. அதில் கலை நிகழ்ச்சிகள், ராட்டினம் சுற்றுதல் போன்றவை இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் அப்பகுதி வாலிபர்கள் சிலர், ராட்டினம் சுற்றும்போது 2 சுற்றுகள் குறைவாக சுற்றியதாக கூறி ராட்டின ஊழியர்களை தாக்கியுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.