காரைக்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம் தொடக்கம் : வரும் 22ம் தேதி பூக்குழி இறங்குதல், முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும்
Mar 14 2023 2:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி பங்குனி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நீண்ட வரிசையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். காரைக்குடி மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் மாசி - பங்குனி திருவிழா 44 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். கணபதி ஹோமத்தை தொடர்ந்து, தங்க கொடிமரத்திற்கு புனித நீர் ஊற்றி பால், சந்தனம், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பஞ்ச திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்து சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. வரும் 22&ம் தேதி காலை 8 மணிக்கு காவடி, பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு கரகம், மதுக்குடம், முளைப்பாரி புறப்பட்டு பருப்பூரணி கங்கையில் விடுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.