திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோவில் தேரோட்ட திருவிழா : ராமானுஜர் ஜீயர், மாவட்ட ஆட்சியர் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்பு
Mar 17 2023 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோவில் தேரோட்ட திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியையொட்டி, நம்பி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற பெரிய மரத் தேரோட்ட நிகழ்ச்சியில், திருக்குறுங்குடி ராமானுஜர் ஜீயர் சுவாமி கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இவ்விழாவில் சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பிராயர் பெருமாளை தரிசனம் செய்தனர்.