மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் - லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு
Mar 22 2023 10:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் லட்சக் கணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். வழக்கம் போல் தொடங்கிய திருவிழாவில், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது, சர்வலோகேஷ்வரி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மலர், தங்க நகை, கிரீடம் உள்ளிட்ட அலங்காரத்தில் நள்ளிரவில் எழுந்தருளிய அம்மனை லட்சக் கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்து வழிபட்டனர். இதன்போது, தீமிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், வேப்பிலையை ஆடையாக அணிந்து வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர்.