சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நாளை தொடக்கம் - சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு
Mar 26 2023 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா
நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை
இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
இன்று பூஜைகள் எதுவும் நடைபெறாது.
நாளை காலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும்.