கரூர் முனியப்ப சுவாமி திருக்கோயிலில் 45-ம் ஆண்டு திருவிழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
May 17 2023 10:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாவட்டம் நெரூரை அடுத்த முனியப்பனூர் கிராமத்தில் உள்ள முனியப்ப சுவாமி திருக்கோயிலில் 45ம் ஆண்டு திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இந்தாண்டு காவிரி ஆற்றிலிருந்து வேல் எடுத்தல், தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்தலுடன் திருவிழா துவங்கியது. ஊரின் எல்லையிலிருந்து புறப்பட்ட இந்த வேல் வீதி உலாவின் போது பூசாரி பழனியப்ப சுவாமி ஆட்டுக் குட்டியின் ரத்தத்தை குடித்து அருள்வாக்கு கூறினார். இந்த விழாவில் கரூர் மாவட்டம் மட்டுமல்லாது, ஈரோடு, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.