திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவிப்பு
May 18 2023 6:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், பக்தர்கள் தரிசனத்திற்காக 30 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.