திருப்பதி கோயிலில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் : உண்டியல் காணிக்கையாக ரூ.4.56 கோடி வசூல்
May 23 2023 1:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளை தவிர மற்ற நாட்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படாததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 18 குடோன் நிரம்பியது. இதனால், இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று கோயிலுக்கு 78 ஆயிரத்து 349 பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு 39 ஆயிரத்து 634 பேர் முடி காணிக்கை செலுத்தினர். மேலும், 4 கோடியே 56 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.