திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட 10 நாட்களில் சுமார் 6 லட்சம் பேர் சாமி தரிசனம்... ஏழுமலையான் கோயிலில் 40 கோடியே 18 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை
Jan 3 2024 6:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருந்த 10 நாட்களில் 6.43 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
பெருமாள் கோயில்களில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாசியன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் 23ம் தேதி ஏழுமலையான் கோயிலில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக தினசரி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இம்மாதம் 1 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் மூடப்பட்டது. கடந்த 23ம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை 10 நாட்களில் மொத்தம் 6 லட்சத்து 43 ஆயிரத்து 934 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த 10 நாட்களில் நேற்று முன்தினம் வரை உண்டியலில் 40.18 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.