விடுமுறை தினத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை
Jan 7 2024 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் ஞாயிறு விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பழனி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழா தொடங்க உள்ள நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரமாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் பாதயாத்திரையாக அலகு குத்தியும் காவடி எடுத்தும் கிரிவலப் பாதையில் ஆடி பாடி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.