அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
Jan 7 2024 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 4.30 மணிக்கு ஆகம விதிப்படி கோவில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.