திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் உத்திராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா : சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த விநாயகர் மற்றும் சின்ன நாயகர்
Jan 9 2024 6:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை நகரில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் உத்திராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாள் உற்சவத்தில் விநாயகர் மற்றும் சின்ன நாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, சுவாமிகளுக்கு பால், பழம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.