விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற தெப்போற்சவ நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை தரிசித்தனர்
Apr 20 2017 12:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரத்தில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீப திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகள் அமர வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி, வெள்ளப்பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 10ம் நாள் திருவிழாவாக புஷ்பப்பல்லக்கில் பெருமாள் திருவீதி உலா நடைபெறுகிறது.