பழனியில், 90-வது ஆண்டு நவரத்தின விழாவை முன்னிட்டு, பனிரெண்டார் தீர்த்தக்காவடியினர், அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்

Apr 21 2017 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், 90-வது ஆண்டு நவரத்தின விழாவை முன்னிட்டு, பனிரெண்டார் தீர்த்தக்காவடியினர், அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பங்குனி உத்திரம் நிறைவு பெற்றபின் வருவது விஜயாபுரம், பொன்னுக்காளி பாளையம், அமராபதிபாளையம் கூடிய பனிரெண்டார் தீர்த்தக்காவடி ஆகும். இந்தக் காவடி கூட்டத்தினர், 90-வது ஆண்டு நவரத்தின விழாவை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி, பங்குனி உத்திரத்தன்று பவானியிலிருந்து தீர்த்தம் முத்தரித்து, வெள்ளி மற்றும் வைரம் பதித்த தங்க வேல்களுடன் பழனிக்கு பாதயாத்திரை தொடங்கினர். 10 நாட்களாக பாதயாத்திரையாக பழனி வந்த அவர்கள், நேற்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம் செய்தனர். பின்னர், வாசவி மஹாலில், வெள்ளி மற்றும் தங்க வேல்களை வைத்து, அலங்கரிக்கப்பட்ட தண்டாயுதபாணி சுவாமிக்கு தீபாராதனையுடன் சிறப்பு வழிபாடு நடத்தினர். முன்னதாக பக்தி இன்னிசை, சண்முகார்ச்சனை, சங்காபிஷேகம், புத்தகம் வெளியீடு உள்ளிட்டவை நடைபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00