மழை வேண்டியும், நீர் நிலைகள் நிரைந்து விவசாயம் தழைக்க வேண்டியும், கும்பகோணம் அருகே பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை
Apr 23 2017 2:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மழை வேண்டியும், நீர் நிலைகள் நிரைந்து விவசாயம் தழைக்க வேண்டியும், கும்பகோணம் அருகே பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் தர மறுப்பதாலும் பருவ மழை தவறியதாலும், டெல்டா மாவட்டங்களில், குறுவை, சம்பா,சாகுபடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் மழை வேண்டியும், விவசாயம் சிறக்க வேண்டியும், கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரி பள்ளிவாசல் திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழுகையில் பெண்களும், குழந்தைகளும், ஆர்வத்துடன் பங்கேற்று, சுமார் ஒரு மணி நேரம் தொழுகையில் ஈடுபட்டனர்.