நெல்லையப்பர் - காந்திமதி கோவிலில் தொடங்கிய சித்திரை திருவிழா : திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
Apr 24 2017 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவிலில் தொடங்கிய சித்திரை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் இன்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கியது. இதையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 2ம் தேதி நடைபெறவுள்ளது.
நாகை மாவட்டம் திருநன்றியூரில் உள்ள ஸ்ரீமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவையொட்டி தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த தீமிதி விழாவை முன்னிட்டு காலை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தேடை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குழியில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.