திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 7 ஆயிரம் கிலோ தங்கத்தை நீண்டகால வைப்புத் தொகையில் முதலீடு செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு
Apr 25 2017 7:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் திரு. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி திரு.சாம்பசிவ ராவ், ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தில் 7 ஆயிரம் கிலோ தங்கம், பல்வேறு வங்கிகளில் ஒரு சதவீத வட்டிக்கு முதலீடு செய்திருப்பதாகவும், அதனை திரும்பப்பெற்று இரண்டு புள்ளி ஐந்து சதவீத வட்டிக்கு நீண்டகால வைப்புத்தொகையில் முதலீடு செய்யப்படும் என்றும் கூறினார். மேலும், பக்தர்களின் வசதிக்காக திருப்பதி மலைப்பாதையை 24 மணிநேரமும் திறந்துவைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் திரு. சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.