தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
Apr 26 2017 7:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு 500 லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் அமைச்சர் திரு. சேவூர் எஸ். ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மாரமங்கலத்தில் உள்ள மாரீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 108 மூலிகை பொருட்களை கொண்டு யாக பூஜைகள் நடத்தி புனிதநீர் கோபுரகலசத்தின் மேல் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.