அணைப்பாடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் திருவிழா : திரளான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசித்தனர்
Jun 21 2017 9:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அணைப்பாடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் அணைப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் தேர்த் திருவிழாவானது கடந்த 11-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஸ்ரீவிநாயகர், கருப்பையா சுவாமி, ஸ்ரீ முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜையுடன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அருள்மிகு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து திருத்தேரினை, செண்டை மேளம் முழங்க, திரளான பக்தர்கள் ஒம் சக்தி, பராசக்தி, என்ற பக்தி முழக்கத்துடன் வடம்பிடித்து இழுத்தனர். இத்திருவிழாவில் அணைப்பாடி, கொளத்தூர், கொளக்காநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.