ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 27-வது நாள் நோன்பின் சிறப்பு தொழுகை சென்னையில் இரவு முழுவதும் நடைபெற்றது : பெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பங்கேற்பு
Jun 23 2017 8:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 27-வது நாள் நோன்பின் சிறப்பு தொழுகை சென்னையில் இரவு முழுவதும் நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் நோம்பிருந்து இறைவனை வழிபட்டு வருகின்றனர். 30 நாட்கள் கடைபிடிக்கப்பட்டு வரும் இந்நோம்பின் 27-வது நாள் இரவு மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளில் இஸ்லாமிய மக்கள் இரவு முழுவதும் தொழுகையை நடத்துவர். இதனை முன்னிட்டு சென்னை அயனாவரத்தில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பங்கேற்று தொழுகையை மேற்கொண்டனர்.
இதேபோல், திண்டுக்கல் நாகல் நகரில் அமைந்துள்ள ஜூம்மா மசூதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.
மதுரை மாவட்டத்தில் கோரிப்பாளையம், நெல்பேட்டை, திருமங்கலம் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் திறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இதனிடையே, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார். அதனைதொடர்ந்து நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றனர்.