ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது : அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்பு
Aug 4 2017 10:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஏர்வாடி தர்காவில் மகான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷகீது ஒலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். 843-வது ஆண்டு சந்தனக்கூடு திருவிழா வரும் 15ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. சின்னஏர்வாடி பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ யானை, நாட்டியக்குதிரைகளுடன் கொடி ஊர்வலம் நடைபெற்றது. மத நல்லிணக்க விழாவாக நடைபெறும் இவ்விழாவில், தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.