தூத்துக்குடி பனிமயமாதா ஆலய சப்பர தேர் பவனி - தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்பு
Aug 5 2017 11:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் உள்ள உலகப்புகழ்பெற்ற பனிமயமாதா கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர தேர் பவனி இன்று நடைபெறவுள்ளது.
தூத்துக்குடியின் உலகப்புகழ்பெற்ற பனிமயமாதா ஆலயத்திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலை சுற்றி வலம் வரும் தேர் பவனி நேற்று நடைபெற்ற நிலையில், முக்கிய நிகழ்ச்சியான சப்பர தேர் பவனி இன்று நடைபெறுகிறது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர் பவனி நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் தூத்துக்குடியில் குவிந்துள்ளனர். இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.