தூத்துக்குடியில் ராஜஸ்தானைச் சேர்ந்த கலைஞர்கள் தயாரித்த மும்பை மாடல் விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
Aug 8 2017 8:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ராஜஸ்தானைச் சேர்ந்த கலைஞர்கள் முகாமிட்டு தயாரித்து வரும் மும்பை மாடல் விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வரும் 25ம் தேதி விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சிலைகள் தயாரிக்கும் பணி பல்வேறு பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த கலைஞர்கள் முகாமிட்டு செய்து வரும் விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மும்பையில் தயாரிப்பதைப் போன்று இவர்கள் தயாரிக்கும் சிலைகள் ஒன்று முதல் 8 அடி வரை உயரம் கொண்டதாகக் காணப்படுகிறது. இவற்றை தூத்துக்குடி மட்டுமின்றி, பிற மாவட்டங்களைச்சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.