திருவாரூர் ஆதிபராசக்தி கோயிலில் வருடாந்திர திருவிழா - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கஞ்சிக்கலயம் சுமந்து வழிபாடு
Aug 13 2017 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற வருடாந்திர சிறப்பு வழிபாட்டில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கஞ்சிக்கலயம் சுமந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆதிபரசக்தி அம்மன் கோயிலில், ஆடிப்பூர வழிபாடு கடந்த 20 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கஞ்சிக்கலயம் சுமந்து கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் பத்தாயிரத்தும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் கஞ்சி கலயம் சுமந்து ஆழித்தேரோடும் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக சென்று வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தினர்.